அனைத்து வருவாய் கிராமங்களிலும் இ சேவை மையம்

இ சேவை மையம்

சாதி சான்றிதழ் உட்பட அனைத்து விதமான அரசு சான்றிதழ், வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் என அனைத்தும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளது.

நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இ சேவை மையங்கள் உள்ளன. ஊராட்சி பகுதிகளில் இ சேவை மையங்கள் குறைவு.

அதனால், அனைத்து வருவாய் கிராமங்களிலும் இ சேவை மையங்கள் ஆரம்பிக்க வேண்டுமென அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கிராம புறங்களில் உள்ள படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுய தொழிலை ஆரம்பிக்கலாம்.

வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய இணைய தளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://tnega.tn.gov.in

 

https://tnesevai.tn.gov.in

தமிழ்நாட்டின் வருவாய் கிராமங்கள்

Also Read  உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திப்பு