பணிகளை தொடரும் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
இருக்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரையின் வழிகாட்டுதலில் கொரொனா தடுப்பு பணிகள் மற்றும் அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.
மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சி அமைப்புகளின் உன்னதம், இந்த கொரொனா யுத்தகாலத்திலும் தொடர்வது கண்கூடாக தெரிகிறது.
மழை காலத்தை வரவேற்க ஏரியை தூர்வாரும் ஏ.வேலங்குடி ஊராட்சி
நீர்மேலாண்மை
வேலங்குடி ஊராட்சி மலம்பட்டி கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான சின்னகுளத்து ஊரணி தூர்வாரும் பணிகள் ஊராட்சி மன்ற தலைவரின் உத்தரவின்படி துவங்கப் பட்டது.
இதுபோன்ற பணிகள் அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும்.
நீர்மேலாண்மையில் ஏரி,குளங்களை தூர்வாருவதே அடிப்படை ஆகும்.
அடிப்படை பணியை ஆரம்பித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாரட்டுக்கள்.
தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்
எஸ் இராமசந்திரபும்
நமது இணையத்தின் சார்பாக தொடர்ச்சியாக கவனித்து வரும் ஊராட்சிகளில் இதுவும் ஒன்று.
இந்திய ஜனநாயகத்தில் கையெழுத்திட்டு பண பரிவர்தனை செய்யும் ஒரே பதவி ஊராட்சி தலைவர். பிரதமர்,முதல்வர்களுக்கு கூட இல்லாத அதிகாரம்.
அப்படிப்பட்ட பதவிக்கு வந்தவர் அதிகார பீடத்தில் அமர்ந்து, கட்டளையிடும் நிலையை விடுத்து தானே இறங்கி குப்பை...
குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியம் குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகளாக கிருமி நாசினி தெளித்தல், தூய்மை பணிகள் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன்.
பணியாளர்களுக்கு இருவேளை உணவு வழங்கும் இருக்கன்குடி ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் ஒன்றியத்தில் உள்ள இருக்கன்குடி ஊராட்சியில் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டுவேளை சத்துள்ள உணவுகளை வழங்கி வருகிறார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.
கல்யாணிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் கொரானா தடுப்பணிகளை ஊராட்சி தலைவரே களம் இறங்கி செய்து வருகிறார்.
கிருமி நாசினி தெளிப்பது,சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மக்கள் பணியில் மருதுஅழகுராஜ் – திருப்பத்தூரில் தொடரும் சேவை
நிவாரணம்
கவிஞரும் பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்கள் திருப்பத்தூர் தொகுதி முழுவதும் கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருட்கள் வழங்கிவருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி, மெய்யபட்டி, உடையநாதபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளட்ட பகுதி வாழ் மக்களுக்கு 01-05-2020 அன்று நிவாரண பொருட்களை வழங்கினார் மருது அழகுராஜ்.
இராமசாமியாபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் அனைத்து முக்கிய வீதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தூவப்பட்டது.
சாதனையை நோக்கி பயணப்படும் பேராசிரியர் தலைமையிலான ஓர் ஊராட்சி
இராமச்சந்திரபுரம்
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி.
கல்லூரி பேராசியராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவரை தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவரைப் போல சமுகத்தின் மீது மாறாத பற்றுடன் பலரும் உள்ளாட்சி பதவிக்கு வந்திருக்கிறார்கள்.
தன்னை தலைவராக்கிய மக்களுக்கு அனைத்தும் கிடைக்கவேண்டுமென அயராது பாடுபட்டு வருகிறார்.
இந்தியாவின் இதயம் கிராமம் என்று சொன்ன...
கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு நடராஜபுரம் ஊராட்சி சார்பாக நிவாரண பொருட்கள்
சிவகங்கை மாவட்டம்
நடராஜபுரம்பஞ்சாயத்தில் கொரோன தொற்று நோயை பரவாமல்
தடுப்பதற்கு கடுமையாக உழைத்த
பஞ்சாயத்துநிர்வாகிகள் -6
சுகாதாரபணியாளர்கள் - 9
தன்னார்வலர்கள் - 6
தண்ணீர் தொட்டி பராமரிப்பாளர்கள் -8
தூய்மைபணியாளர்கள் - 5
கூட்டுறவு பணியாளர்கள் -3
என மொத்தம் 38 நபர்களுக்கும்,
அவர்களின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாகவும் மற்றும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்...


































