தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி மற்றும் கடைசி ஊராட்சி எது?

தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன.

முதல் ஊராட்சி

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி வரிசைப்படி முதல் ஊராட்சி காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அங்கம்பாக்கம் ஊராட்சியே ஆகும். இந்த ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடைசி ஊராட்சி

தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் வரிசைப்படி கடைசி ஊராட்சி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் சுமார் பதினான்காயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

ஆக…தமிழ்நாட்டின் 1வது ஊராட்சி அங்கம்பாக்கம் ஊராட்சி 12525 வது ஊராட்சி ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி ஆகும்.

Also Read  சர்க்கார்வாழவந்தி ஊராட்சி - நாமக்கல் மாவட்டம்