மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்

கோவை மாவட்டம்

சூலூர்  ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி.
நமது “T.N.பஞ்சாயத்து செய்தி” சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல்.

அதில் அவர் கூறியதாவது:-

எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும்.
அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ் மழை நீர் சேமிப்பு தொட்டி அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் கண்டிப்பாக அமைக்க வலியுறுத்தப்படும்.

அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் அரசு ஆரம்பப்பள்ளி, தொடக்கப்பள்ளி,மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தீவிரமாக முயற்சி செய்வோம் என்று கூறினார்….!

Also Read  கொடமாண்டப்பட்டி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்