ஈஸ்வரமூர்த்திபாளையம் ஊராட்சியில் இடைவிடாது மக்கள் பணியாற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்

ஈஸ்வரமூர்த்திபாளையம்

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்..

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்.

  1. ஒண்டிகடை
  2. காத்தாகவுண்டனூர்
  3. ஈஸ்வரமூர்த்திபாளையம்

இந்த ஊராட்சியின் செயலாளரும்,தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில்குமார் அவர்களிடம் நமது இணைய பத்திரிகையின் சார்பாக பேசினோம்..

ஊராட்சியின் அடிப்படை பணிகள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

கொரோனா தடுப்பு பணியாக ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பை அகற்றும் பணி துரிதகதியில் நிறைவேற்றி உள்ளோம்.

மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது மட்டுமின்றி கொரொனா விழிப்புணர்வு துண்டறிக்கை ஊராட்சி முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி தலைவர்  வெ.ரம்யாவெங்கடேஷ்   மற்றும் அனைத்து ஊராட்சி உறுப்பினர்களும் இரவு பகல் பாராது மக்கள் பணி ஆற்றிவருகிறார்கள் என்றார்.

 

Also Read  ஜெகதேவி ஊராட்சியில் இணைந்து செயல்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள்