குடிமராமத்து பணி
மாதப்பூர் ஊராட்சியில் தொட்டம்பட்டி சத்திரக்குட்டையில் குடிமரமாத்து பணி பூமி பூஜை யுடன் தொடங்கியது.
அந்த நிகழ்வினை மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ச.அசோக்குமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வக்கீல் குமார் , ஒன்றிய குழு உறுப்பினர் செ.லோகுபிரசாத் , ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இரா.பாலசுப்பிரமணியம் ,ஊராட்சி செயலாளர் சரவணகுமார் , ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்