திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் மின்மோட்டார் பழுதுபார்க்கும் பணியும் 3வது வார்டு டிரைனேஜ் சுத்தம் செய்யும் பணியும் 4 வது வார்டில் மழைநீர் வடிகால் பைப் லைன் பதிக்கும் பணியும் நடைபெற்றது.
எஸ் வி புரம் பெரிய லைன் பகுதியில் கிரிமிநாசினி அடிக்கும் பணியும் நடைபெற்றது.
7வது வார்டில் நடைபெற்ற பணியை வார்டு உறுப்பினர் குப் பாத்தாள் சின்னச்சாமி அவர்களும்
மூன்றா வது வார்டில் நடைபெற்ற பணியை வார்டு உறுப்பினர் கற்பகம் அவர்களும்
நான்காவது வார்டில் நடைபெற்ற பணியை வார்டு உறுப்பினர் சுப்பிரமணியம் உடன் இருந்து கவனித்தனர்.
மின்மோட்டார் பழுது நீக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு நேரடியாக ஆய்வு செய்தார்.