தூய்மையான எழுவணி ஊராட்சி-தலைவி சாந்தா உறுதி

விருதுநகர் மாவட்டம்

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி பஞ்சாய்த்திற்கு தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள லி.சாந்தா அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தோம்.

அவர் நம்மிடம் ௯றியதாவது..

எங்கள் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்,தெருவிளக்கு,வாறுகால் சுத்தம் என அனைத்து பணிகளையும் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.

தூய்மையான  கிராமமாக எங்கள் ஊராட்சியை மாற்றுவதே லட்சியம் என்றார்..

எழுவணி ஊராட்சி (Eluvani Gram Panchayat),

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. நாச்சியாரேந்தல்
  2. எழுவணி
  3. வந்தவாசி
  4. சேர்ந்தநதி
Also Read  மாத்தூர் ஊராட்சியில் துரிதகதியில் மக்கள் பணி