உண்மையான சமத்துவம் சொன்ன கொரொனா

பாகுபாடு

இங்கிலாந்து அரச குடும்பத்தையும் விட்டு வைக்காத வைரஸ் கொரொனா.

ஏழை,பணக்காரன்,சாதி,மதம் என பாகுபாடு பார்க்காத சமத்துவ அரக்கன் கொரொனா.

வல்லரசு,வளரும் அரசு என அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்திய ஒரே எமன்.

உலகின் பெரியண்ணன் என திமிராய் அழையும் அமெரிக்காவின் உச்சந்தலையில் ஓங்கி அடித்துக்கொண்டிருக்கும் வைரஸ்.

தலைவன் நான் உயர்தவன் என்ற இறுமாப்பை உடைத்து நொறுக்கிய கொரொனா.

பணமே பிரதானம் என வெறிகொண்டு அழையும் பேராசை பெருமக்களுக்கு பெரும்பயத்தை உருவாக்கி,அனைவரும் சமமே என்று ஓங்கி சொல்லும் வைரஸ்.

ஒழுக்கம்,சுய கட்டுப்பாடு,இயற்கை உணவு இவை போன்ற வாழ்வியலே உகந்தது உன் உலகிற்கு சொல்லும் ரட்சச வைரஸ்.

இதுபோல…பல பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறது கொரொனா.

Also Read  இந்தியாவில் முதல்முறையாக இராஜபாளையத்தில் - கொரொனா தடுப்பு