கொரொனா நிதி-அசத்திய ஆச்சி நிறுவனம்

நிவாரண நிதி

உலகை இருக்கும் கொரொனாவை கட்டுப்படுத்த மனித சமூகம் போராடி வருகிறது.

இந்தியாவில் ஊரடங்கு ஒரு மாதத்தை நெருங்கி உள்ளது. சமூக விலகலை கடைபிடித்து சமூக பரவலை இதுவரை தடுத்துள்ளோம்.

கொரொனாவின் கோர தாண்டவத்தால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவருகிறது.

தமிழகத்திற்கு கொரொனா தடுப்பு நிதியாக மத்திய அரசிடம் கேட்டதில்,நான்கில் ஒரு பங்கு கூட கிடைக்கவில்லை.

இந்த நேரத்தில் தமிழக அரசிற்கு நிதி உதவி அளிப்பது நமது அனைவரின் கடமை.

ஆச்சி மசாலா நிறுவனம் ஒரு கோடியே பத்து லட்ச ரூபாயை தமிழக அரசிற்கு வழங்கி உள்ளது பாராட்டத்தக்கது.

அதுமட்டுமின்றி இருபதாயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி உள்ளது.

அரசுடன் இணைந்து மேலும் பல உதவிகள் செய்திட தயாராக உள்ளோம் என அறிவித்துள் ஆச்சி மசாலா நிறுவனத்திற்கு நமது இணையத்தின் சார்பாக பாராட்டுக்கள்.

மேலும்…ஆச்சி நிறுவனத்தின் உதவி கிராமம் வரை சென்று சேரவேண்டும் என்பது நம்முடைய விருப்பம்.

Also Read  கல்யாணிபுரத்தில் களமிறங்கிய ஊராட்சி தலைவர்