ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை மாவட்ட தலைவர் அறிக்கை

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள
அறிக்கை….

தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21.08.2024 புதன் கிழமை அன்று மாவட்ட முழுமைக்கு ஊராட்சி செயலாளர்கள் சுமார் 350 நபர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியரகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

இதனை அடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் அடுத்த கட்டமாக செப்டம்பர் 27ல் சென்னை சைதாபேட்டை பணல் மாளிகை முன்பு மாநில அளவில் பெருத்திரள் முறையீடு இயக்கம் நடத்தபட உள்ளது என்று கூறினார்

மாவட்ட நிர்வாகிகள் மாரிமுத்து , முத்துராமலிங்கம் உடன்
இருந்தனர்

Also Read  எங்கே போகிறது ஊராட்சியின் பணம்?