மணலூர் ஊராட்சி

மணலூர் ஊராட்சி /Manaloor Panchayat

மணலூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் , சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2446 ஆகும். தற்போதைய நிலவரப்படி 2887 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 1428 பேரும், ஆண்கள் 1416 பேரும் உள்ளனர். பாண்டிச்சாமி நகர் எனக் கூறப்படும் ஒத்தவீடு ஊராட்சிக்கு உட்பட்டு அமைந்திருக்கிறது. வைகை ஆற்றின் தென்கரையில் இந்த ஊராட்சி அமைந்துள்ளது.

Also Read  முக்குடி ஊராட்சி