மழவராயனேந்தல் ஊராட்சி

மழவராயனேந்தல் ஊராட்சி /Malavarayanendal Panchayat

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மழவராயனேந்தல். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1975 ஆகும். தற்போதைய நிலவரப்படி 2105 பேர் உள்ளனர். இவர்களில் பெண்கள் 1083 பேரும் ஆண்கள் 1032 பேரும் உள்ளனர். இவ்வூரில் உள்ள புலியாருடைய அய்யனார் கோவிலில் பழமையான சுடுமண் குதிரை உள்ளது. அதன் மேல் அய்யனார் அமர்ந்துள்ளார். இக்கோவிலில் உள்ள புலியாருடைய அய்யனார் மற்றும் கருப்பசாமி ,ராக்கச்சி அம்மன் சிலைகள் பழமையானவை. இவ்வூரில் முளைப்பாரி மற்றும் அய்யனார் கோவில் மாசி களரி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். செம்பராயனேந்தல், மழவராயனேந்தல் ஆகிய சிற்றூர்கள் இந்த ஊராட்சிக்கு  உட்பட்டு இருக்கிறது.

Also Read  மணலூர் ஊராட்சி