ஆணையருடன் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு

சென்னை:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் ஜான்போஷ்கோ பிரகாஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தங்களின் ஒற்றை கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்திடல் பற்றி விரிவாக விவாதித்தனர்.

அப்போது ஊரக வளர்ச்சி. மற்றும் ஊராட்சி துறையின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாலை 4 மணிக்கு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி இஆப அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிகிறது.

Also Read  அவதூறு பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் - TNRDOA சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை