தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஒகளூர் ஊராட்சி

பெரம்பலூர் மாவட்டம்

வேப்பூர் ஒன்றியம் ஒகளூர் ஊராட்சி தலைவர் கு.க.அன்பழகன்,துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஊராட்சியின் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.

இக்கட்டான காலகட்டத்தில் தன்னுயிரை துச்சமென நினைத்து மக்களை காக்க பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றார் ஊராட்சி தலைவர் அன்பழகன்.

Also Read  ஊராட்சி மன்றங்களுக்கு உதாரணமாகிய ஒகளூர் ஊராட்சி- அதிசயம் ஆனால் உண்மை