ஓடாத்தூர் ஊராட்சி

ஓடாத்தூர் ஊராட்சி / ODATHUR Panchayat

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஊராட்சி. மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிருதுமால் நதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 569 ஆகும். தற்போதைய நிலவரப்படி 669. இவர்களில் பெண்கள் 285 பேரும் ஆண்கள் 284 பேரும் உள்ளனர்.

ஓடாத்தூர் ஊராட்சியை உள்ளடக்கிய சிற்றூராட்சிகளாக அழகரேந்தல், பிரான்குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. வானம் பார்த்த பூமியான இந்த ஊராட்சியில் வைகை ஆற்று நீர்பாசனம் மூலம் விவசாயம் பிரதான தொழிலாக இருக்கிறது.

Also Read  இளஞ்செம்பூர் ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்