ஏனாதி-தேளி ஊராட்சி

ஏனாதி-தேளி ஊராட்சி / ENATHI-THELI Panchayat

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் தாலுக்காவில் அமைந்துள்ளது. ஏனாதி- தேளி ஊராட்சி. இது, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து உள்ளாட்சித் தேர்தலில் 9 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2391 ஆகும். தற்போதைய நிலவரப்படி 1395 உள்ளனர். இவர்களில் பெண்கள் 1295 பேரும் ஆண்கள் 1296 பேரும் உள்ளனர். ஏனாதி -தேளி ஊராட்சிக்கு உள்ளடங்கிய சிற்றூராட்சிகளாக சொச்கையன்பட்டி, சொச்கையன்பட்டி ஒத்தவீடு, ஏனாதி காலனி, ஏனாதி செவல், குசவங்குளம், மஞ்சக்குடி இருப்பு, மஞ்சள்குடி காலனி, தேளி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது.

Also Read  சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்