தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.இப்படி ஒரு செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம்.
அப்படி சென்ற இடமெல்லாம் மக்களுக்காக பணியாற்றி விட்டு அரியலூர் மாவட்ட திட்ட இயக்குநராக இன்று( 10-12-2024) பதவி ஏற்றுக்கொண்டார் முனைவர் ஆ.ரா.சிவராமன் அவர்கள். மாவட்ட, ஒன்றிய அலுவலர்கள் உட்பட அனைவரும் வரவேற்றனர்.
அரியலூர் மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ள திட்ட இயக்குநரை நமது இணைய செய்தி தளத்தின் சார்பாகவும் வரவேற்கிறோம்.