கூட்டமைப்பு தலைவர்
நமது இணையத்தில் கிராம ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு அறிவித்த இலவச பயிற்சி பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
22-05-2022 அன்று கூட்டமைப்பின் தலைவர் பாண்டியராஜன் தொடர்பு கொண்டார்.
முறையாக பதிவு செய்துள்ளோம்.தற்போது உள்ளாட்சி அமைப்பில் பதவிக்கு வந்தவர்களின் பெரும்பான்மையான வர்கள் புதியவர்கள்.
அவர்களுக்கு எங்களின் கூட்டமைப்பு சார்பாக இணைய வழியாகவும்,நேரிடையாகவும் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம் என்றார்.
மக்களுக்காக சேவையாற்ற வருபவர்களை என்றும் நமது இணையம் வரவேற்கும்.
































