பஞ்சராகிப்போன பஞ்சாயத்துராஜ்

மாநில சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என கூப்பாடு போட்டு அதிகாரத்திற்கு வந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் ஊராட்சிகளின் அதிகாரம் படிப்படியாக பறிக்கப்பட்டு பஞ்சாராகிப்போய்விட்டது  பஞ்சாயத்துராஜ் சட்டம்.

அண்டை மாநிலமான கேரளத்தில் மட்டுமே உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.

1. வீட்டு வரி உட்பட அனைத்து வரி வசூலும் தமிழ்நாடு முழுவதும் ஒரே கணக்கில் வர உள்ளது.

2. ஊராட்சித் தலைவருக்கான அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு அதிகாரங்கள் அதிகாரிகளின் வசம் சென்று கொண்டிருக்கிறது.

இப்படி…உள்ளாட்சி அமைப்புக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. இனி, உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தி வீண் செலவு செய்ய வேண்டியதில்லை.

Also Read  அரும்பாக்கம்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!