பதவி உயர்வு
இன்று ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களில் இருந்து உதவி இயக்குநராக 19 பேர்கள் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இது துறைரீதியாக நடக்கும் நிகழ்வு தான். ஆணையரை ஏன் பாராட்டுகிறீர்கள் என கேட்டோம்.
 
  
  
 
 
சார்…இந்த 19 பேரில் ஒருவர் இன்று ஓய்வு பெற உள்ளார். இன்று அவர் உதவி இயக்குநராக பதவி ஏற்ற பிறகு பணி ஓய்வு பெற்றால், அதன் பலன் அதிகம். அதன்பொருட்டே இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல எங்கள் துறையில் அய்யா அவர்கள் ஆணையராக வந்தபிறகு இவரைப் போல நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று உள்ளனர். அதன்பொருட்டே, எங்கள் ஆணையரை மனம்நிறைய பாராட்டுகிறோம் என்றார் நம்மிடம்.
நமது இணைய தளத்தின் சார்பாகவும் ஆணையரை பாராட்டுகிறோம். ஆணையரால் இன்னும் பல நூறு பேர்கள் பயன்பெறட்டும்.
 
                
 
		
