காக்கும் கரங்களுக்கு நமது இணைய தளம் சார்பாக பங்களிப்பு

ஊராட்சி செயலாளர்கள்

தமிழ்நாடு முழுவதும் 11ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

பல்வேறு சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஊராட்சி செயலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன.

நாம் நமது செய்தி இணைய தளத்தை ஆரம்பித்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. ஊராட்சி செய்திகளை மட்டுமே பெரும்பான்மையாக வெளியிடும் ஒரே இணைய செய்தி தளம்.

இந்த ஐந்து ஆண்டுகாலத்தில் பல்வேறு சங்கங்களோடு தொடர்ந்து பயணப்பட்டு வருகிறோம். தவறுகளை கண்டித்தும், நல்ல விசயங்களை பாராட்டியும் செய்தி வெளியிட்டு வருகிறோம்.

நிதி

மனித வாழ்வில் திடீரென நிகழ்வது மரணம் மட்டுமே.அதேவேளை, மனிதர்களை தாக்கும் நோய்கள். இந்த இக்கட்டான இரண்டு சூழ்நிலையில் உள்ள ஊராட்சி செயலாளர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பே காக்கும் கரங்கள்.

அதன் செயல்பாடுகளை நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தனது சங்கத்தில் உறுப்பினராக இல்லாத ஊராட்சி செயலாளர்களுக்கும் உதவி செய்து வருவதை அறிந்தோம்.

ஆகவே, நமது இணைய செய்தி தள நிறுவனத்தின் சார்பாக மாதம் தோறும் 500ரூபாய் பங்களிப்பாக அளித்திட உள்ளோம். 

இந்த ஏப்ரல் மாத நமது பங்களிப்ப்பு:-

ஏப்ரல் மாத பங்களிப்பு
ஏப்ரல் மாத பங்களிப்பு
மே மாத பங்களிப்பு
மே மாத பங்களிப்பு

இந்த செய்தியை படிக்கும் நல்ல உள்ளம் படைத்தோர் இந்த அமைப்பிற்கு உங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்துங்கள்.

Also Read  கரூர் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி எது தெரியுமா?