பதவி ஏற்பு
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கடந்த 7ம் தேதி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றிய கேசவதாசன் அவர்கள் பதவி உயர்வு பெற்று, விருதுநகர் மாவட்ட திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்ட திட்ட இயக்குநராக பதவி ஏற்றுள்ள கேசவதாசன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அனைத்து பணியாளர்கள்,சங்கத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.