சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 198 வாகனங்களை திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள். உதவி செயற்பொறியாளர்கள். உதவி இயக்குநர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக இன்று தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
அந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைசர்சர் இ.பெரியசாமி, தலைமை செயலாளர் முருகானந்தம் இஆப முதன்மை செயலாளரும் கூடுதல் தலைமை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி இஆப, ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா இஆப மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.