விலாரிபாளையம் ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விலாரி பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் திருமதி M. செல்வராணி மணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது .
இக்கூட்டத்தில் உதவி கோட்ட பொறியாளர் திருமதி கவிதா நெடுஞ்சாலைத்துறை) முன்னிலையில் நடைபெற்றது
மேலும் இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை,மற்றும் , ஏனைய துறைகள் கலந்துகொண்டு கிராம சபாவில் பொதுமக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்திடத் தேவையான விளக்கங்கள் ஊராட்சியின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
ஊராட்சி செயலாளர் .K சிவசங்கர் அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து வாசித்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை தீர்மானங்களாக நிறைவேற்றினார் .
முடிவில் பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது .
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.